வவுனியா சிங்கர் நிறுவனத்தினால் நேற்று (18.12.2015) காலை வவுனியா அருந்ததி மண்டபத்தில் 2009 மற்றும் 2010ம் ஆண்டில் பிறந்த சிறுவர்களுக்கான சித்திரப் போட்டி நடைபெற்றது.
இரு குழுக்களாக நடைபெற்ற இச் சித்திரப் போட்டியில் பல சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் சிங்கர் நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் திரு MRM.நிஷாக், சிங்கர் வவுனியா முகாமையாளர் திரு உதயகுமார் கஜதீபன் ஆகியோரால் வழங்கப்பட்டது.
இன் நிகழ்வை சிங்கர் நிறுவன ஊழியர்கள் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தனர்.









