டெல்லி விமான நிலையம் அருகே நொறுங்கி விழுந்த விமானம்: 10 பேர் பலி!!

719

delhi_flight_002

டெல்லி விமான நிலையம் அருகே எல்லை பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. டெல்லி விமான நிலையம் அருகே எல்லை பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சூப்பர்கிங் ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 10 பேர் பலியாகினர்.

டெல்லி விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விபத்து பற்றி கூறுகையில், இன்று காலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ராஞ்சிக்கு எல்லை பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான ஒரு விமானம் புறப்பட்டது.

அந்த விமானத்தில் விமானி உட்பட 10 பேர் இருந்தனர்.

விமானம் புறப்பட்டச் சில நிமிடங்களிலேயே விமான கட்டுப்பாட்டு அறையை விமானி தொடர்பு கொண்டுள்ளார்.அவர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கூறியதோடு, விமானத்தை விமான நிலையத்துக்கே திருப்பிச் செலுத்துவதாகவும் அவசரமாக தரையிறங்க ஓடுதளத்தை தயார் படுத்துமாறும் கோரினார்.

அவரது கோரிக்கை ஏற்கப்பட்ட நிலையில், சில வினாடிகளிலேயே விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.இந்நிலையில், காலை 9.50 மணியளவில் விமான நிலையத்துக்கு அருகேயே விமானம் விழுந்து நொறுங்கியது.இந்த விமான விபத்தில் விமானத்திலிருந்த 10 பேர் பலியாகியுள்ளனர்.பின்னர் சம்பவ இடத்துக்கு 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன என தெரிவித்துள்ளார்.