வவுனியா நகரசபையும் பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து நகரப்பகுதிகளில் கட்டாக்காலிகளாக திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டது.
பிடிக்கப்பட்ட மாடுகள் நாகரசபை வளாகத்தில் கட்டிவைக்கப்பட்டதுடன் அவற்றுக்குரிய உரிமையாளர்களுக்கு தண்டப்பணமும் அறவிடப்பட்டது.
சமீப காலமாக வவுனியாவில் இக் கட்டாக்காலி மாடுகளால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறுகள் ஏற்பட்டதுடன் பல வீதி விபத்துக்களும் ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.






