வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று(23.12.2015) வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகள் நத்தார் நிகழ்வுகளை கொண்டாடி வருகின்றனர்.
புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் புனர்வாழ்வு ஆணையாளர் பணியகத்தின் மேற்பார்வையின் கீழ் புனர்வாழ்வ இணைப்புக் காரியாலயமாகிய வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தின் பயிற்சி பயிலுனர்கள் 52 பேர் வவுனியா புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏ.ரத்நாயக்கா தலமையில் நத்தார் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.
நிகழ்வில் எல்லே, முட்டியுடைத்தல், கையிறிழுத்தல். ஓலை பின்னுதல் போன்ற பாரம்பரிய விழையாட்டுக்களுடன் பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.






