மேற்படி நிகழ்வானது செட்டிகுளம் எபிரோன் பப்டிஸ்ட் திருச்சபையில் மூன்றாம் கட்டமாக சிறப்பாக நடைபெற்றது
இந்த நிகழ்வினை வன்னிமாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்களின் இணைப்புச்செயலாளரும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய அருட்கலாநிதி எஸ் சந்திரக்குமாா் அவா்களின் அனுசரனையில் நடைபெற்றது.
இவ் வைபவத்தின் பிரதம விருந்தினராக அமொிக்க தேசத்தில் இருந்து வருகை தந்திருந்த கௌர கித்சிறி அத்துலத்முதலி அவா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தாா்.
செட்டி குளம் நைஐீமுதீன் அவா்களும், எபிரோன் பப்டிஸ்ற் திருச்சபையின் போதகர் பாரத் அவா்களும் அவா்தம் குடும்பமும், இலங்கை அப்போஸ்தல திருச்சபை வவுனியா போதகா் சுதா்ஷன் அவா்களும், செட்டிகுளம் பொலிஸ் அத்தியட்சகர் அவா்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை சிறப்பம்சமாகும்.
நிகழ்வில் சுமாா் ஆயிரம் குழந்தைகளுக்கான பாிசுப்பொதிகளில் ஒரு பகுதி எபிரோன் பப்டிஸ்ற் திருச்சபையில் வைத்து குழந்தைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.






