இன்று மதியம் 1.45 மணியளவில் வவுனியா கோமரசங்குளம் பிரதான வீதியில் இரு டிப்பர் வாகனங்கள் வீதியை விட்டு விலகியதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
ஒரு வாகனத்திற்கு வழிவிட முயற்சித்தபோது இரு வாகனங்களும் வீதியை விட்டு விலகியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதானால் இப் பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அயலவர்கள் இவ் இரு வாகனங்களையும் மீட்டெடுத்து போக்குவரத்தை வகமைக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.






