வவுனியாவில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு!!

243

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் ஒரு தொகுதியான 90 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில், கோவில்குளம் உமாமகேஸ்வரன் ஞாபகார்த்த பொது நூலகத்தில் நேற்று (05.01.2016) நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், மற்றும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் திரு.அமுதன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உப தலைவர்களில் ஒருவரும், வயம்ப பல்கலைக்கழக மாணவனுமான இ.சாருஜன், கழகத்தின் இணைப்பாளர்களில் ஒருவரும் பெரதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவனுமான சி.இந்துஜன், கழகத்தின் உறுப்பினர் பி.கெர்சோன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் 3வது வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 27.12.2015 அன்று வன்னி இன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டிற்கான செயற்றிட்டத்தில் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம், எமது மாணவர்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் கழகத்தின் செயற்றிட்ட ஆண்டறிக்கையில் கழகம் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கான வேண்டுகைகள் கழகத்தின் நிர்வாகத்திடம் இருப்பதனால், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஊடாக உதவி புரிய விரும்பிய நல்லுள்ளங்கள் கழகத்தின் செயலாளரும், ஊவா வெல்லச பல்கலைக்கழத்தின் மாணவனுமான திரு ஸ்ரீ.கேசவன் அவர்களுடன் தொடர்பு கொண்டு தமது சமூக பணிகளை முன்னெடுக்க முடியும். (தொ.இல : 0775058672)

குறிப்பு : கற்றல் உபகரணங்கள் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும், நிதி அன்பளிப்பு பெற்றுக்கொள்ளப்படமாட்டாது.

செய்திகளுக்காக
ஊடகபிரிவு,
தமிழ் தேசிய இளைஞர் கழகம்.

IMG_3209 IMG_3210 IMG_3218 IMG_3220 IMG_3223 IMG_3234 IMG_3236 IMG_3256 IMG_3257 IMG_3258 IMG_3261 IMG_3267