வவுனியாவில் தொடர்ச்சியான பெய்துவரும் மழை காரணமாக இதுவரை 27 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக கடும்மழை பெய்துவரும் நிலையில் பல குளங்கள் பெருக்கெடுத்துள்ளதுடன் தாழ்வான பகுதிகளில் வசித்துவரும் குடும்பங்கள் உட்பட குளங்களை அண்டிய பல கிராமங்கள் வெள்ள அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியா வடக்கு – கனகராயன்குளம் வடக்கு கிராமசேவகர் பிரிவில் 6 குடும்பங்களை சேர்ந்த 27 பேர் இடம்பெயர்ந்துள்தாகவும்,
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் பொதுநோக்கு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.






