எதிர்வரும் பொங்கல் தினத்தினை முன்னிட்டு தேசிய இளைஞர்கள் சேவை மன்றமும் இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த பொங்கல் சிறப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று அதிகாலை 6.30 மணிக்கு புறப்பட்ட சிறப்பு புகையிரதம் நண்பகல் 1.20 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது.
இச் சிறப்புப் புகையிரதத்தில் வவுனியா புகையிரத நிலையத்திலிருந்து மன்னார், திருகோணமலை, வவுனியா மாவட்டங்களிலிருந்து வருகை தந்த இளைஞர்கள் யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்றனர்.
இச்சிறப்பு பொங்கல் நிகழ்வில் இலங்கையின் அனைத்து பாகங்களிலிருந்தும் சுமார் 1500ற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.






