வவுனியா மாவட்ட ஆரம்ப பாடசாலையில் தரம் ஒன்று மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்று காலை வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில் அதிபர் எஸ்.பஸ்தியாம்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது.
பிரதம விருந்தினராக திருமதி. வசந்த குலராஜா (பாடசாலை வலய பிரதிநிதி) கலந்துகொண்டு மாணவர்களை வரவேற்று நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
தரம் இரண்டு மாணவர்கள் தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கு பலூன் கொடுத்து வரவேற்றுச் சென்றனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்கள்.






