வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தின் கால் கோள் விழா இன்று (14.01.2016) காலை 9.00 மணிக்கு, வித்தியாலய அதிபர் திருமதி சி.பத்மநாதன் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
தரம் 01 ற்கு புதுமுக மாணவர்களை வரவேற்கும் இவ் கால்கோள் விழாவின் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் திரு எம்.பி.நடராஜா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு.க.சந்திரகுலசிங்கம்(மோகன்) , மகாறம்பைக்குளம் கிராம சேவையாளர் திரு வே.கனகவேல்ராஜா ஆகியோருடன் இவ் நிகழ்வில் வித்தியாலய ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.






