வவுனியா தெற்கு, வடக்கு கல்வி வலயக் கல்வி அலுவலகங்கள் இணைந்து நடாத்திய தைப்பொங்கல் விழா நேற்று (15.01.2016) வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய வித்தியா விநாயக ஆலய முன்றலில் திருமதி செ.அன்ரன் சோமராஜா தலைமையில் காலை 10.30 மணியவில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியா நகரசபைச் செயலாளர் P.T.தர்மேந்திரா கலந்து சிறப்பித்தார்.மேலும் வடமாகாண சபை உறுப்பினர் M.P.நடராஜ், மதத் தலைவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
பொங்கல் நிகழ்வைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.






