தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடர்ச்சியாக வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க சிறுவர் பாடசாலையில் இன்று பாடசாலை சிறுவர்களுக்காக பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.
இப் பொங்கல் நிகழ்வானது சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் தலைவர் மக்கள் சேவை மாமணி சேனாதிராசா தலமையில் நடைபெற்றது.
இப் பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட ஆரம்ப பாடசாலை மாணவர்கள் பொங்கலோ பொங்கல் என கூறி உற்சாகமாக பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டமையைக் காணக்கூடியதாக இருந்தது.