வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் 20 வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு சமூக ஆர்வலர் தினேசன் அவர்கள் அதிபர் திரு எஸ்.சசிகுமார் மூலம் தமிழ் விருட்சம் அமைப்புக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக கற்றல் உபகரணங்கள் கனடா வாழ் ராம் சிவாவின் ராம் பவுன்டேசன் மூலம் வழங்கி வைக்கப்பட்டன.
பல மாணவர்கள் கல்விச்செயற்பாட்டை கற்றல் உபகரணங்கள் வாங்க முடியாமல் தொடர முடியாமல் உள்ளதாக சமூக ஆர்வலர் தினேசன் அவர்கள் அதிபர் மூலம் தமிழ் விருட்சத்துக்கு தெரியப்படுத்தி ஒரு கிழமைக்குள் தமிழ் விருட்சம், ராம் பவுன்டேசன் நிதி உதவியுடன் இந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.