பம்பலப்பிட்டியில் ரயிலில் மோதி இளைஞர் பலி..!

528

railwayபம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவின் கடற்கரைவீதி பகுதியில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து பாணதுறை வரை பயணித்த ரயிலில் மோதியே இவர் பலியாகியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில் உயிரிழந்தவர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 30 வயதான நபர் எனத் தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.