ஆஷஸ் 3வது போட்டி நாளை :ஹாட்ரிக் வெற்றி பெறுமா இங்கிலாந்து.?

393

ashesஇங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்டில் 14 ஓட்டங்களாலும் 2-வது டெஸ்டில் 347 ஓட்டங்களாலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதனால் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

இந்தநிலையில் இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. விமர்சனத்துக்கு உள்ளான கிளார்க் தலைமையிலான ஆஸி. அணி தொடரை இழக்காமல் இருக்கும் வகையில் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.