வவுனியா மாவட்டத்திற்கான புதிய அரசின் முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று (25.01.2016) மாலை 04 மணியளவில் ஆரம்பமாகி மாவட்டச்செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .
இக் கூட்டத்திற்கு இராஜாங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவர்களான கே.கே.மஸ்தான், சாள்ஸ் நிர்மலநாதன், வைத்திய கலாநிதி சிவமோகன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் , வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், தியாகராஜா, இந்திரராசா, எம்.பி.நடராஜா, தர்மபால செனவிரத்தன, ஜயதிலக்க மற்றும் வடமாகாண சபைச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர் புஸ்பகுமார,சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர்கள், சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்கள், எனப் பலரும் கலந்து கொன்டனர்.