வவுனியா ஈழத்து பழனி முருகன் ஆலய தைப்பூச நிகழ்வுகள்!!

413

 
வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலய வருடாந்த தைப்பூச விஞ்ஞாபனம் நேற்று முன்தினம் (24.01.2016) நேற்று மிகச் சிறப்பாக ஆலயத்தில் சிவஸ்ரீ வை.சிவசங்கர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

இப் பூசை நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் கௌரவ எம்.பி,நடராஜ், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன், சமுக ஆர்வலர் மணியம் உடன் ஆலய பரிபாலசபைத் தலைவர் மாதவன், செயலாளர் செல்வகுமார் உட்பட பரிபாலசபை உறுப்பினர்கள், பக்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உதவிக் குருக்கள் சிவஸ்ரீ சி.ஸ்ரீசங்கர சர்மாவும் அலங்கார அபிசேக பூசைகளை பிரதம குருக்களுடன் இணைந்து நடத்தினார். பூசை நிகழ்வுகள் காலை 11 மணிக்கு நிறைவடைந்த பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பூசை முடிவடைந்த பின்னர் மலை அடிவாரத்தில் கருங்கல்லாலான அலங்கார வரவேற்ப்புத் தூணும் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

DSCN0611 DSCN0613 DSCN0615 DSCN0617 DSCN0618 DSCN0619 DSCN0621 DSCN0623 DSCN0630 DSCN0634 DSCN0649 DSCN0657 DSCN0659 DSCN0663 DSCN0672 DSCN0676 DSCN0681 DSCN0688 DSCN0691 DSCN0707 DSCN0789