வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலய வருடாந்த தைப்பூச விஞ்ஞாபனம் நேற்று முன்தினம் (24.01.2016) நேற்று மிகச் சிறப்பாக ஆலயத்தில் சிவஸ்ரீ வை.சிவசங்கர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
இப் பூசை நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் கௌரவ எம்.பி,நடராஜ், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன், சமுக ஆர்வலர் மணியம் உடன் ஆலய பரிபாலசபைத் தலைவர் மாதவன், செயலாளர் செல்வகுமார் உட்பட பரிபாலசபை உறுப்பினர்கள், பக்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
உதவிக் குருக்கள் சிவஸ்ரீ சி.ஸ்ரீசங்கர சர்மாவும் அலங்கார அபிசேக பூசைகளை பிரதம குருக்களுடன் இணைந்து நடத்தினார். பூசை நிகழ்வுகள் காலை 11 மணிக்கு நிறைவடைந்த பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பூசை முடிவடைந்த பின்னர் மலை அடிவாரத்தில் கருங்கல்லாலான அலங்கார வரவேற்ப்புத் தூணும் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.