அதிக நேரம் தொலைபேசியில் பேசுபவர்களுக்கு ஆபத்து!!

385

mobile

தினசரி கையடக்கத் தொலைபேசியில் பேசுவோருக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவை உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் இஸ்ரேலில் உள்ள டெல்அவில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி யனிவ் ஹம்ஷானி தலைமையிலான குழுவினர் ஒரு புதிய ஆய்வு நடத்தினர்.

அதன்படி அதிக நேரம் கையடக்கத் தொலைபேசியில் பேசுபவர்களை புற்று நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் நீண்ட நேரம் கையடக்கத் தொலைபேசியில் பேசுபவர்களிடமும், பேசாதவர்களிடமும் இருந்து எச்சில் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களில் அதிக நேரம் கையடக்கத் தொலைபேசியில் பேசுபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான அறிகுறி இருந்தது தெரியவந்தது. கையடக்கத் தொலைபேசியில் பேசும் போது காதுகளின் அடியில் உள்ள சுரப்பிகள் மற்றம் திசுக்கள் பாதிக்கப்பட்டு மரபணு கோளாறினால் புற்று நோய் கட்டிகள் ஏற்பட வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.