வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய நுழைவாயில் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் மற்றும் மன்னார் மாவட்டநீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா கிளிநொச்சி மாவட்ட நீதிபதி பிரபாகரன், வவுனியா அரச அதிபர் ரோகண புஸ்பகுமார உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வரவேற்கப்படுகின்றனர்
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 1999ம் ஆண்டு க.பொ.த (சா/த), 2002ம் ஆண்டு க.பொ.த (உ/த) கல்வி பயின்ற பாடசாலை பழைய மாணவர்களினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயில் இன்று புதன்கிழமை (27.01.2016) 12.30 அளவில் பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நுழைவாயில் வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி .இளஞ்செழியன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதுடன் மேலும் பிரபாகரன் (நீதிபதி, கிளிநொச்சி), அலெக்ஸ் ராஜா (நீதிபதி, மன்னார்), திருமதி. அன்ரன் சோமராஜா (வலயக் கல்விப் பணிப்பாளர், வவுனியா), புஸ்பகுமார (அரச அதிபர், வவுனியா), கல்லூரி அதிபர் மரியநாயகம் ஆகியோர் கலந்து கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. முழுமையான செய்திகளுக்கு வவுனியா நெற் உடன் இணைந்திருங்கள்..