வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய நுழைவாயில் வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களால் இன்று (27.01.2016) மதியம் 12.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
வவுனியாவின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் நுழைவாயில் 1999ம் ஆண்டு க.பொ.த (சா/த), மற்றும் 2002ம் ஆண்டு க.பொ.த (உ/த) கல்வி பயின்ற பாடசாலை பழைய மாணவர்களினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரபாகரன் (நீதிபதி கிளிநொச்சி), அலெக்ஸ் ராஜா (நீதிபதி மன்னார்), திருமதி.அன்ரன் சோமராஜா (வலயக் கல்விப் பணிப்பாளர் வவுனியா), புஸ்பகுமார (அரச அதிபர் வவுனியா), கல்லூரி அதிபர் மரியநாயகம்,ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.