நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது அதன் கழிவரையில் சிகரெட் பிடித்த இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்து மும்பை வந்த ஜெட் ஏர்வேஸ் 9W 09 விமானத்தில் பயணித்த ரவி தங்கர் என்ற பயணி விமானம் பறந்து கொண்டிருந்த போது அதன் கழிவரையில் சிகரெட் பிடித்துள்ளார்.
இதையடுத்து விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களில் அவரை கைது செய்துள்ளனர்.அவர் மீது சாகர் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.