தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 307 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இலங்கை சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டில்ஷான் 99 ஓட்டங்களை பெற்று துரதிஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
மேலும் லகிரு த்ரிமானே 68 ஓட்டங்களையும், சங்கக்கார ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 75 ஓட்டங்களையும் விலாசியுள்ளனர்.
இதன்படி 308 ஓட்டங்கள் வெற்றியிலக்காக கொண்டு தென்னாபிரிக்க அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.