வவுனியா வடக்கு வலயத்தில் உள்ள கனகராயன்குளம் ஆரம்பப் பாடசாலையின் புதிய கட்டிடத் திறப்புவிழாவானது நேற்று (29.01.2016) பாடசலையின் அதிபர்திரு.செ.பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராசா, G.T.லிங்கநாதன், நெடுங்கேணி பிரதேச செயலாளர் க.பரந்தாமன், நெடுங்கேணி பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் ச.தணிகாசலம் மற்றும் வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் வ.சிறீஸ்கந்தராசா, வவுனியா வடக்குவலய உத்தியோகத்தர்கள், கனகராயன்குளம் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி, அயல்பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் மிகவும் அழகான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றதுடன், இப்பாடசாலைக்காக நான்கு கணணிகளை கனகராயன்குளத்தைச் சேர்ந்த தியாகராசா திவாகர் அவர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.