வவுனியா மரையடித்தகுளம் சித்தி வினாயகர் ஆலய கும்பாபிசேகம்!!

848

 
வவுனியா மரையடித்தகுளம் இந்தியன் வீட்டுத்திட்ட சித்தி வினாயகர் ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்வு கடந்த 29.01.2016 அன்று நடைபெற்றது.

இன் நிகழ்வானது சிவஸ்ரீ தியாகசச்தாரக் குருக்கள் சிவஸ்ரீ அ.தவேந்திரராசா குருக்கள் ஆகியோரால் சிறப்பாக நடாத்தப்பட்டது.

இக் கும்பாபிசேக விழாவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்குமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா, மற்றும் கலாச்சார உத்தியோகத்தர், பகுதி கிராமசேவையாளார் கு.தவராசா மற்றும் அயல் கிராமப் பெரியவரும் இவ் ஆலய வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கியவருமான.திரு.முத்திலிங்கம் ஜயா அவர்களும் கட்டிடவேலைசெய்த வே.ரூபன், மற்றும்

கிராமமக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் கோயில் பரிபாலன தலைவர், செயலாளகள், பொருளாளர் மற்றும் அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டு வினாயகப் பெருமானின் கும்பாபிசேகத்தை சிறப்பித்தார்கள்.

நடைபெற்ற இன்நிகழ்வில் ஆலய பரிபாலன சபைத் தலைவர் யோ.அலெச்சாண்டர் அவர்களினால் இவ் ஆலய வளர்ச்சிக்கு நிதிஉதவி பொருளுதவி வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.

IMG_8460 IMG_8462 IMG_8465 IMG_8470 IMG_8471 IMG_8473 IMG_8476 IMG_8479 IMG_8480 IMG_8488 IMG_8490 IMG_8492