வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரனையில் பண்டாரவன்னியன் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம்(30.01.2016) வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் யங்ஸ்டார் அணியை எதிர்த்து ஈகிள் விளையாட்டுக் கழகம் விளையாடியது. இதில் இரு அணிகளும் இறுதி வரை சம நிலையில் காணப்பட்டதால், பணாட்டிக் முறையில் ஈகிள் அணி வெற்றியினை தனதாக்கியது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, மாமாகாண சபை உறுப்பினர்கள் ம.தியாகராசா, G.T.லிங்கநாதன், வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரதேச இணைப்பாளர், கைத்தொழில் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் நகர இணைப்பாளர் அப்துல் பாரி மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.