
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே கலைப்பீட 3ம் வருட மாணவர்கள், 4ம் வருட மாணவர்கள் உள்பிரவேசிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தடை வித்துள்ளது.
நேற்று பல்கலைக்கழகத்தில் இரண்டு பிரிவுகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்தே இதனை யாழ்.பல்கலைக்கழக பதிவாளர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இன்று மதியம் 12 மணிக்குள் இரண்டு வருடங்களைச் சேர்ந்த மாணவர்களும் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டள்ளது.
மேலும் மறு அறிவுறுத்தல்கள் வரும் வரையில் இவர்கள் எவரும் பல்கலைக்கழக எல்லைக்களுக்குள்ளாக செல்லக் கூடாது என்றும் அதனை மீறி நடந்தால் பல்கலைக்கழக அனுமதி ரத்துச் செய்யப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.





