சுவிசில் உள்ள புங்குடுதீவு மைந்தர்களின் உதவியினால் வன்னிக்கு அனுப்பப்பட்ட “வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்” முதற்கட்டமாக கடந்த முதலாம் திகதி (01.02.2016) அன்று வவுனியா பொது வைத்த்யசாலைக்கு வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வவுனியா மாவட்ட பிராந்திய வைத்தியசாலைகளுக்கும் கடந்த 03.02.2016 அன்று “வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்” வழங்கி வைக்கப்பட்டது.
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் வேண்டுகோளிற்கிணங்க, சுவிஸ் “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பினால் வவுனியா ஓமந்தை, நவ்வி (பாலமோட்டை), புளியங்குளம், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளுக்கு தேவையான ஒருதொகுதி பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வின் பிரதம அதிதிகளாக வவுனியா நகரசபையின் முன்னாள் நகர பிதாவும், வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோர் கலந்து கொண்டு அன்பளிப்பு பொருட்களை வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களிடம் நேரடியாக கையளித்தார்கள்.
இவ் நிகழ்வுகளில் நவ்வி (பாலமோட்டை) பிராந்திய வைத்தியசாலையின் வைத்தியர் திரு. எஸ்.சூரியகுமார், ஓமந்தை பிராந்திய வைத்தியசாலையின் வைத்தியர் திரு. எஸ்.மதுரகன், நெடுங்கேணி பிராந்திய வைத்தியசாலையின் வைத்தியர் திரு.கே.முபாரிஸ், புளியங்குளம் பிராந்திய வைத்தியசாலையின் வைத்தியர், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளை இணைப்பாளர் திரு. கோபி மோகன், கழகத்தின் உறுப்பினர்களான திரு. எஸ்.சுகந்தன் திரு. எஸ்.கஜூரன், திரு. எஸ்.ஜனகன், திரு. பி.ஹரிஸ் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.