மாணவி ஒருவர் தனது நண்பருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போதே தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுபலக்ஷ்மி ஆச்சார்யா (34) என்ற மாணவி, ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மினரல்ஸ் அன்ட் மெட்டீரியல்ஸ் டெக்னாலஜியில் படித்து வருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவர் நாக்பூரைச் சேர்ந்த தனது ஆண் நண்பருடன் செல்போனில் வீடியோ அழைப்பு செய்து பேசியுள்ளார்.இந்நிலையில், வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருக்கும்போதே அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர், உடனே மன்சேஷ்வர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் சுபலக்ஷ்மியின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.