தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு இன்று முதல் 2ம் தவணை விடுமுறை..!

378

schoolநாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்க தமிழ், சிங்கள பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக இன்று மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை களுக்காக செப்டம்பர் 02 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்பட்ட சகல முஸ்லிம் பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைளுக்காக எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் க. பொ. த. (உ/த) பரீட்சை மண்டபங்களாக பயன்படுத்தப்படும் முஸ்லிம் பாடசாலைகள் மட்டும் செப்டம்பர் 02 ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.