வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நேற்று (12.02.2016) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்கள் எம் .பி நடராஜ், இ .இந்திரராஜா ம.தியாகராஜா ஆகியோரும்
கௌரவ விருந்தினர்களாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.ஜி.இளையதம்பி மற்றும் திரு.கி.உதயகுமார் (உதவிக் கல்விப் பணிப்பாளர்), திரு ஜுட் பரதமாறன்(ஆசிரிய ஆலோசகர் உடற்கல்வி வவுனியா தெற்கு வலயம்), திரு.கி.கயந்தன் (கிராமசேவையாளர் பூவரசங்குளம்) ஆகியோர் கலந்து கொண்டனர் .
மற்றும் விசேட விருந்தினராக திரு.இ. இராஜகுகனேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு இன் நிகழ்வினை சிறப்பித்தார்.










