வவுனியா இலங்கை போக்குவரத்துச் சபை நடத்துனர் மீது தாக்குதல்!!

387

attacked

வவுனியா இலங்கை போக்குவரத்துச் சபை சாலை முகாமையாளர் நேற்று மாலை நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

அதனையடுத்து நடத்துனரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து வவுனியா இ.போ.ச.சாலை முகாமையாளரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

யாழ்ப்பாணம் இ.போ.ச. சாலையின் பேரூந்தின் நடத்துனர் வவுனியா யாழ்ப்பாணம் சேவையினை மேற்கொண்டு வவுனியா வந்துள்ளார். குறித்த நடத்துனர் குறித்த நேரத்தில் பேரூந்தினை செலுத்துவதற்கு சாரதிக்கு அனுமதிக்காது பயணிகளை எற்றிக் கொண்டிருந்துள்ளார்.

நேரக்கணிப்பாளர் வவுனியா சாலை முகாமையாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதையடுத்து நடத்துனருடன் முரண்பட்டுக் கொண்டிருந்த சமயம் எதிர்பாராமல் முகாமையாளர் நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

அதனையடுத்து நடத்துனர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டார்.

நேற்று இரவு பொலிசார் வவுனியா இ.போ.ச. சாலை முகாமையாளரை கைது செய்து விசாரணையினை மேற்கொண்டு வருவதுடன் பேரூந்தும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.