அவுஸ்திரேலியா செல்லத் தயாரான 39 பேர் மாத்தறையில் கைது..!

434

arrest1சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல தயார் நிலையில் இருந்த ஒரு தொகுதியினர் மாத்தறையில் நேற்று  இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை – கனத்தகொட பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

39 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு அதில் 18 ஆண்களும் ஏழு பெண்களும் 14 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.