வவுனியா கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி கடந்த 05.02.2016 அன்று பாடசாலையின் அதிபர் கே.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வவுனியா வடக்கு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி இ.சண்முகலிங்கம் மற்றும் சிறப்பு விருந்தினராக கி.மங்களகுமார் (உதவிக் கல்விப் பணிப்பாளர்- உடற்கல்வி) மற்றும் கௌரவ விருந்தினராக ரி.ரவிச்சந்திரன் (ஆசிரிய ஆலோசகர்) ஆகியோர் உட்பட ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.






