இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றம்சாட்டி கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 தமிழ்நாடு மீனவர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 6-ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த (ஜுன்) மாதம் 6-ம் திகதி கைது செய்தனர்.
அவர்கள் சென்ற 5 படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், 21 தமிழ்நாடு மீனவர்களும் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களின் விளக்கமறியலை 6-ம் திகதி வரை நீட்டித்து நீதவான் ஆனந்தி கனகரத்தினம் உத்தரவிட்டார்.
இதேவேளை, கடந்த (ஜூலை) மாதம் 31-ம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த 74 மீனவர்கள் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.