
வவுனியா தேக்கவத்தை பகுதியில் பல காலமாக கஞ்சா பொதிசெய்து விற்பனையில் ஈடுபட்டுவந்த ஒருவரை வவுனியா பொலிசார் நேற்று (16.02.2016) பிற்பகல் கைது செய்துள்ளனர்.
இவரிடம் கேரளா கஞ்சா பொதிகள் பொதியிடப்பட்டு விற்பனை செய்வதற்கு தயார் நிலையில் இருந்தபோதே தகவல் ஒன்றின் அடிப்படையிலே மேற்படி நபரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





