வவுனியா வடக்கு ஊஞ்சல்கட்டி அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல திறனாய்வுப் போட்டி பாடசாலையின் அதிபர் இ.பாஸ்கரன் தலைமையில் நேற்று (16.02.2016) நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ம.தியாகராசா, G.T.லிங்கநாதன், மற்றும் கோட்டக்கல்வி அலுவலக அதிகாரிகள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பகுதி கிராமசேவையாளர், பகுதி தபால் நிலைய தபால் அதிபர் மற்றும் கோயில் பூசகர் பாடசாலையின் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.






