வவுனியா ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் 2016ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுகள் கடந்த வியாழக்கிழமை பாடசாலையின் அதிபர் மு.ஜினாஹ் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனையின் பணிப்பாளர் திரு.அன்ரன் சோமராஜா கலந்து கொண்டதுடன் , கல்விப்பணிமனையின் உயர் அதிகாரிகள், கோட்டக்கல்வி அதிகாரிகள், கல்வியலாளர், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான வெற்றிக் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-செட்டிகுளம் சர்ஜான்-