வவுனியாவில் வன்புணர்விற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விபுலானந்தா கல்லூரியின் மாணவி கெங்காதாரன் கரிஷ்ணவியின் இறுதி அஞ்சலி இன்று(19.02.2016) காலை மாணவியின் வீட்டில் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்கள், வவுனியா விபுலானந்தாக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிகள், பிரதேச முக்கியஸ்தர்கள், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி நிகழ்த்தியதுடன்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களிடம் பொது அமைப்புக்களின் சார்பாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
மாணவியின் வீட்டிலிருந்து ஆரம்பமான ஊர்வலம் பிரதான வீதியூடாக விபுலானந்தாக் கல்லூரியினை வந்தடைந்து சிறிது நேரம் பாடசாலையின் நின்று அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் வைரவப்புளியங்குளம், குருமன்காடு ஊடாக சென்ற ஊர்வலத்தில் பெண்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






