வவுனியா பெரியகோமரசன்குளம் மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று (18.02.2016) பி.ப 2.00 மணிக்கு பாடசாலை அதிபர் திரு.த.பூலோகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக G.T.லிங்கநாதன் (வடமாகாணசபை உறுப்பினர்) மற்றும் சிறப்பு விருந்தினர்களாக N.சுபசிங்க (உதவிக் கல்விப்பணிப்பாளர் – உடற்கல்வி), ஜனாப்.அகமட் முகமட் ஸீபைர் (இணைப்பாளர் உடற்கல்வி), ஜூட் பரதமாறன் (ஆசிரிய ஆலோசகர்), ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாடசாலையின் உள்ள சங்கிலியன், எல்லாளன் மற்றும் பண்டாரவன்னியன் இல்லங்களில் க.சுப்பிரமணியம் ஆசிரியரின் தலைமையிலான எல்லாளன் இல்லம் இறுதியாக முதலாம் இடத்தினை பெற்று வெற்றிக்கிண்ணத்தினை தட்டிச்சென்றது.






