கடந்த 16.02.2016 அன்று உக்குளாங்குளத்தில் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கரிஷ்ணவியின் படுகொலைக்கு நீதிவேண்டியும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டியும் இன்று வவுனியாவில் பூரண கர்த்தால் நடைபெறுகின்றது.
இதனை முன்னிட்டு வவுனியாவில் அனைத்து விபார ஸ்தாபனங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டிகள் பேரூந்துகள் உட்பட எந்த வாகனங்களும் இயங்கவில்லை.
தூர இடங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்துகளும் தனியார் பேரூந்துகளும் மட்டுமே இயக்கப்படுகிறன.
வவுனியா நகரம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமையால் பாடசாலைகள் இயங்கவில்லை. அரச அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை மிகக் குறைவாக காணப்பட்டது. வங்கிகள் எதுவும் இயங்கவில்லை.
இது தவிர பூந்தோட்டம், குருமன்காடு, வைரவப்புளியங்குளம், பண்டாரிக்குளம், இறம்பைக்குளம் உட்பட அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
ஆங்காங்கே சில இடங்களில் நடுவீதியில் டயர்கள் போடப்பட்டு தீயிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி வவுனியாவில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சற்று பதட்டமான சூழ்நிலை நிலவுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துகொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.






