குவைத்தில் இன்னல்களை அனுபவித்த 28 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!!

419

kuwaitcity

வேலை வாய்ப்புத் தேடி குவைத் சென்று அங்கு பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து இலங்கை தூதரகத்தில் தஞ்சம் புகுந்த 28 இலங்கையர்கள் நாடு திரும்பினர். இன்று அதிகாலை அவர்கள் நாடு திரும்பினர்.

பல வருடங்களாக தொழில் புரிந்த இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் குவைத் இலங்கை தூதரகத்திற்குச் சென்று முறையிட்ட இவர்கள் தூதரக உதவியுடன் நாடு திரும்பியுள்ளனர்.

இன்று நாடு திரும்பியவர்களில் ஆண், பெண் இருபாலாரும் அடங்குகின்றனர்.