தமிழ் விருட்சம், கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம் இணைந்து நடாத்திய திருவள்ளுவர் குருபூசை தினம் இன்று(25.02.2016) காலை 8.30 மணிக்கு வவுனியா பொது வைத்தியசாலை சுற்று வட்ட வீதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அடியில் கலாநிதி தமிழ் மணி அகளங்கன் தலைமையில் நடை பெற்றது .
இந்த நிகழ்வில் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலை அதிபர் திரு பஸ்தியாம்பிள்ளை, ஆசிரியர்கள் ஐ.கதிர்காமசேகரன், இந்திரன், வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் ரோய் ஜெயக்குமார், ஓய்வு பெற்ற அதிபர் தேசமான்ய சிவஞானம், ஓய்வு பெற்ற அரச ஊழியர் திரு நா.நடராசா, வவுனியா தமிழ் விருட்சம் மற்றும் வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), கவிஞர் மாணிக்கம் ஜெகன், பிரபல வர்த்தகர் சிவசுப்பிரமணியம், விக்னா, சமூக ஆர்வலர்கள் யோகா, பிரதாபன், அன்ரு உட்பட இலங்கை திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர் .
மலர் மாலை அணிவித்து ,மலர் தூவி திருவள்ளுவருக்கு வணக்கம் செய்த பின் தலைமை உரையாற்றிய தமிழ் மணி அகளங்கன் அவர்கள் வள்ளுவரின் பெருமைகளை நயம்பட உரையாற்றினார். அவரின் உரையின் பின்னர் நிகழ்வின் ஏற்பாட்டாளர் சந்திரகுமார் (கண்ணன்) அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது






