
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினுடைய புதிய நிர்வாகத் தெரிவும் பொதுக்கூட்டமும் எதிர்வரும் 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் செல்வி.தனுசா அவர்களினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் விடைபெற்றுச் சென்றுள்ள பாடசாலையின் அதிபருக்கான பிரியாவிடை நிகழ்வினை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
இவ் ஒன்றுகூடலில் பாடசாலையின் சகல பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
-பழைய மாணவர் சங்கம்-





