வவுனியா வடக்கு மன்னகுளம் தமிழ்க் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல திறனாய்வுப் போட்டி பாடசாலையின் அதிபர் திரு.ஜெ.செந்தில்நாதன் தலைமையில் நேற்று முன்தினம் (26.02.2016) நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா, சிறப்பு விருந்தினராக திருமதி.மா.முகுந்தன்( பிரதிக் கல்விப் பணிப்பாளர்- கல்வி. நிர்வாகம்) கெளரவ விருந்தினராக திரு.வே.கிருபானந்தம் (கோட்டக்கல்வி அதிகாரி- நெடுங்கேணி) திரு.இ.நவரட்ணம்(உதவிக் கல்விப் பணிப்பாளர்- .ஆரம்பப் பிரிவு) திரு.செ.ஜெயபாலசிங்கம், பழைய மாணவர், அதிபர் பெரியகுளம் அ.த.க. பாடசாலை) திருமதி. உ.பிரதீபா (கிராமசேவையாளர்- மன்னகுளம்) திரு. ஆர்.எம். அபயக்கோன் (பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி – கனகராயன்குளம்) மற்றும் கோட்டக்கல்வி அலுவலக அதிகாரிகள், அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.






