யாழ்ப்பாண மாவட்டத்தில் இருவேறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளுக்குள் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 218 சந்தேக நபர்களைப் பொலிஸார் கடந்த வாரத்தில் கைது செய்து நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவினுள் நபரொருவரை அடித்துக் காயப்படுத்தியமை தொடர்பாக 23 பேரையும், சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரையும், யாழ். நீதிவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 24 பேரையும், குடிபோதையில் வாகனம் செலுத்திய 12 பேரையும், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 10 பேரையும், களவு சம்பந்தமாக 4 பேரையும், பண மோசடியுடன் தொடர்புடைய 2 பேரையும், குடிபோதையில் கலகம் விளைவித்த 7 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.