யாழில் கடந்த வாரத்தில் 218 சந்­தே­க­ந­பர்கள் பொலி­ஸாரால் கைது!!

322

Jaffna1

யாழ்ப்பாண மாவட்­டத்தில் இரு­வேறு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிரி­வு­க­ளுக்குள் பல குற்­றச்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­டைய 218 சந்­தேக நபர்­களைப் பொலிஸார் கடந்த வாரத்தில் கைது செய்து நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இவ்­வி­டயம் தொடர்­பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்­பாணப் பொலிஸ் பிரி­வினுள் நப­ரொ­ரு­வரை அடித்துக் காயப்­ப­டுத்­தி­யமை தொடர்­பாக 23 பேரையும், சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் 4 பேரையும், யாழ். நீதிவான் நீதி­மன்­றத்­தினால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்ட 24 பேரையும், குடிபோ­தையில் வாகனம் செலுத்­திய 12 பேரையும், சட்­ட­வி­ரோ­த­மாக மது­பானம் விற்­பனை செய்த 10 பேரையும், களவு சம்­பந்­த­மாக 4 பேரையும், பண மோச­டி­யுடன் தொடர்­பு­டைய 2 பேரையும், குடி­போ­தையில் கலகம் விளை­வித்த 7 பேரையும் பொலிஸார் கைது செய்­துள்ளனர்.