வவுனியா பயங்கரவாத தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் கணபதிப்பிள்ளை வடிவேலு மரணம்!!

703


 
முன்னாள் போராளிகளில் பலர் குடும்பத்துடன் இணையக் காரணமாக இருந்த வவுனியா பயங்கரவாத தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் மாரடைப்பால் மரணமானார்.

யாழ்பாணம் வடமராட்சி , துன்னாலையில் பிறந்த பயங்கரவாத தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் கணபதிப்பிள்ளை வடிவேலு பல்வேறு அழுத்தங்களின் மத்தியில் பணியாற்றியவர்.



தனது சேவை காலத்தில் யாழ் குடாநாட்டில் சேவை செய்ய வேண்டும் என்ற ஆவலுடன் புதிய அரசு தனக்கு இடமாற்றம் யாழ் குடாநாட்டில் தரும் என எதிர்பாத்திருந்த பொலிஸ் அதிகாரி தனது இறுதி ஆசை நிறைவேறாமலே தனது சேவை காலத்தில் மாரடைப்பால் மரணம்.

பொலிஸ் அதிகாரியின் பூதவுடல் 208 சிவன் கோவில் வீதி உக்கிளாங்குளம் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கபட்டுள்ளது.



பல நூறு அரச அதிகாரிகள், முப்படையினர், முன்னாள் போராளிகள், பொதுமக்கள், எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவருடைய நல்லடக்கம் இன்று 01.03.2016 மதியம் ஒரு மணிக்கு நடைபெற்றது.



news (1) news (2) news (3) news (4)