வவுனியாவில் சுகாதார சீர்கேடான உணவகங்களில் திடீர் சோதனை!!

974

 
வவுனியவில் சுகாதார சீர்கேடான உணவகங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (01.03.2016) திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.

வவுனியா நகரை அண்மித்த பகுதிகளிலே இன்று திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். இரண்டு உணவகங்களில் சுகாதார சீர்கேடான முறையில் உணவு வகைகளை கையாளல், உணவு வகைகளை பாதுகாப்பற்ற முறையில் வைத்தல், சுகாதார முறையில் குடிநீர் இன்மை போன்றவற்றைக் கருத்தில்கொண்டு உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாகவும் சுகாதார முறைப்படி உணவகங்கள் இயங்க பூரண ஒத்துழைப்பினை வழங்க சுகாதார பரிசோதகர்கள் தயாராக உள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

பொதுமக்களுக்கு சுகாதாரம் அற்ற முறையில் உணவு வகைகளை வழங்கிவரும் உணவகங்களுக்கு எதிராக இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முறைப்படி பொது பரிசோதகர்களினால் பார்வையிடப்பட்டு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்ட பின்னரே உணவகங்கள் செயற்பட முடியும் என்றும் மேலும் தெரிவித்தார்.

DSC02057 DSC02060 DSC02061 DSC02065 DSC02066