வவுனியா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டுவிழா!!

611

 
வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (01.03.2016) காலை வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்து.

வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அவர்களின் வழிகாட்லின் கீழ் வடமாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 180 மல்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்கான எம்.பி.நட்ராஜ்; ம.தியாகராசா, ஜெயதிலக, மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன், பிராந்திய சகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி. பவானி பசுபதிராஜா, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், தாதிய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன்,

32லட்சம் ரூபா செலவில் அவுஸ்திரேலியா வைத்தியர்களின் அமைப்பினரால் வடமாகாண சகாதார அமைச்சரின் வேண்டுகோளிற்கு அமைய வவுனியா பொது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட மயக்க மருந்து வைத்திய நிபுணர்களின் பாவனைக்கான இயந்திரத்தினையும் கையளிப்பு செய்து வைக்கப்பட்டது.

DSC02015 DSC02017 DSC02019 DSC02027 P1190707 P1190708 P1190709 P1190710 P1190711 P1190712 P1190713 P1190714 P1190716 P1190719 P1190720 P1190721 P1190722 P1190725