அரச உத்தியோகத்தர்களுக்கான ஆங்கில மொழித்திறன் விருத்தி வகுப்பு இன்று02.03.2016 புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு க. பரந்தாமன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் வே. ஆயாகுலன், வவுனியா வடக்கு பிரதேச செயலக கணக்காளர் பா. நாகேஸ்வரபாலா, வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் சி. கிருஷ்ணகுமார் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இது ஆறு மாதங்கள் கொண்ட பயிற்சி வகுப்பு ஆகும். இப்பயிற்சி நெறியின் ஊடாக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் ஆங்கில பேச்சுதிறன், மொழித்திறன், எழுத்துதிறன் என்பன விருத்தி அடையும் என்பது எதிர்பார்ப்பு ஆகும். இப்பயிற்சி நெறி பிரபல ஆங்கில ஆசிரியர் திரு எஸ். தில்லைமோகன் அவர்களால் நடாத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.